உயிர் காக்கும் சுவாசம்

இன்றைய நாளில் சந்திர மண்டலங்களுக்கு சென்று தங்கியும் வருகின்ற இன்றைய விஞ்ஞானிகள் கூட, ஒன்பது கிரகங்கள் இருப்பதையும் அதன் சுழற்சி முறைகளையும் மறுக்கவில்லை. மேலும் அவர்கள் நமது வான சாஸ்திர அறிவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

இன்றும் ஜெர்மனியில் பல ஆயிரக்கணக்கான தமிழ் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருப்பதை டாக்டர். மோகனவேலு நந்தனம் ஆடவர் ஆர்ட்ஸ் காலேஜ், சென்னை அவர்கள் பார்த்து வந்து கூறியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களாகிய நாம் இன்னும் அன்னிய மோகத்தில் இருந்து விடுபடவில்லை. ஆங்கில மோகத்திற்கும், சிகப்பு தோலுக்கும் ஏங்குகின்றவர் தமிழர் மட்டுமே. அனைத்து உலக நாடுகளிலும் உள்ள மாடுகள் எல்லாம் கூட அம்மா என்று கத்துகிறது. ஆனால் தமிழனின் குழந்தைகளோ மம்மி என்று கூவுகிறது. மம்மி என்றால் இறந்துபோய் நீண்ட நாளான பிணமென்று நாமெல்லாம் அறிவோம்.

அம்மா, அல்லா, ஆமென், ஓம் என்ற வார்த்தைகள் நாம் அடிக்கடி உபயோகித்தால் மூலாதாரம் தூண்டப்பட்டு தசவாயுக்கள் ஆன

பிராணன்,

அபாணன்,

சமாணன்,

உதாணன்,

வியாணன்,

நாகன்,

கூர்மன்,

கிருகரன்,

தேவதத்தன்,

தனஞ்ஜெயன்

அதனதன் இடத்திலிருந்து பிறழாமல் நிலை கொண்டு இருக்கும் . அவ்வாறு தசவாயுக்கள் நிலைகொண்டு இருக்குமேயானால் நோய் இல்லை. அவைகள் தன்னிலை பிறழும் போது தான் நோய் வருகிறது. மனிதன் அதிகம் உண்ணுகின்ற உணவு காற்று. ஒவ்வொரு வினாடியும் காற்றினை உண்டுதான் மனிதன் உயிர் வாழ்கிறான். அத்தகைய காற்று மாசுபட்டாலோ தன்நிலை மாறினாலோ நோய் வந்து அணுகும்.கருப்பையில் சிசு உண்டாவதற்கும் உடலைவிட்டு உயிர் போவதற்கும் தச வாயுக்களே காரணமாகின்றன.

ஏற்றி இறக்கி இரு காலைப்  பூரிக்கும்

காற்றைப்  பிடிக்கும் கணக்கரிவாரில்லை

காற்றைப்  பிடிக்கும் கணக்கரிவாளர்க்கு

கூற்றை உதைக்கும் குறி அதுவாமே

நாம் சாதாரணமாக காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகின்றோம். நாம் வேண்டும் என்று இவ்வாறு செய்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நமக்கு தெரியாமலேயே அது நடந்து கொண்டிருக்கிறது. அதிலுள்ள சூட்சும கணக்கை ஒருவன் அறிந்து கொண்டால் கூற்றுவன் ஆகிய எமனை காலால் கிடைக்கும் உதைக்கும் நிலை வரும் என்கின்றனர் சித்தர்கள்.

ஆகவே இறப்பை தவிர்க்க ஒருவனுக்கு காற்றைப் பற்றிய அறிவும், அதனை உபதேசிக்க குருவும் தேவை. இதனை

சாகாமல் வாழ்வதற்கன்றோ 

தான் கற்கும் கல்வி 

வாகாக நீ மெய் கல்வி அறி மனமே 

என்றும் 

காட்டில் அலைந்தாலும் கன தவம் புரிந்தாலும்

காட்டிக்கொடுக்கும் குருவில்லாமல் 

ஞானம்மா கண்டறியலாகாதே 

என்ற பாடல் வரிகள் மூலமாக அறியலாம்.

யோக நிலையான பேரின்ப நிலைக்கும் காற்று தேவை. மனித நிலையான சிற்றின்ப நிலைக்கும் காற்று தேவை. ஆகவே தான் சிற்றின்ப முடிவில் பெருமூச்சு விடுகின்றான். இதனை சாதாரணமாக மூச்சு வாங்குகிறது என்பர்.இது எதனால் வருகின்றது. அற்ப சந்தோஷமான சிற்றின்பத்தால் வருகின்றது. சிற்றின்பத்தை, இந்த இன்பம் எனக்கு வேண்டாம் என்று இறைவனிடம் சரணடைந்தால், இறைவன் பேரின்ப நிலையை நமக்கு அருளுவான் என்பது சித்தர்களின் முடிவு. இதனை

பிறந்த இடம் நோக்குதே

பேதை மட நெஞ்சம்

கறந்த இடம் நோக்குதே  கண்

என்ற சித்தர் பாடலால் எல்லாம் அறியலாம்.

ஆகவே பிறப்பு, இறப்புக்கு காற்று காரணமாக இருக்கும்போது இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் வரும் நோயும் காற்றாலே தான் வருகின்றது. இதனை திருமூலரின் பாடலால் அறியலாம்.

வளியினை வாங்கி

வயிற்றினில் அடக்கில்

பளிங்கொத்து காயம்

பழுக்கினும் பிஞ்சாம்

காற்றை தகுதியான முறையில் சித்தர்கள் சொன்ன முறைப்படி உட்கொள்ளும்போது வயதானவர்கள் கூட இளைஞன் ஆவார்கள்.

ஒருவேளை உண்பவன் யோகி

இரண்டு வேளை உண்பவன் போகி

மூன்று வேளை உண்பவன் ரோகி

நான்கு வேளை உண்பவன் பாவி

அன்றைய மக்கள் உழைப்பதற்கு உணவு உண்டனர், இன்று உணவு உண்பதே உழைப்பாக்கிவிட்டனர்.

“விருந்தும் மருந்தும் மூன்று நாள்”

என்பது நமது மெய்ஞானிகள் ஆகிய சித்தர்களின் அருள் வாக்கு. விருந்தினர்கள் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு வீட்டில் தங்கலாகாது என்பதும், மருந்து மூன்று நாட்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்பதும் சித்தர்களின் முடிவு. எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மூன்று நாட்களில் குணமாக்க வேண்டும், பெரும்பாலான மக்கள் சித்த மருத்துவத்தில் நீண்ட நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உலகில் உள்ள எல்லா மருத்துவ முறைகளையும் விட சித்த வைத்தியத்தில் மட்டும்தான் ஒரே வேளை மருந்து நோய்களை குணமாக்கும் மருந்துகள் உள்ளன என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சிவானுபவம் பெற்ற சித்தர்களால் அருளப்பெற்றது சித்த மருத்துவம் சித்தர்கள்

வாதம்
வைத்தியம்
யோகம்
ஞானம்
மாந்திரீகம்
ஜோதிடம்
போன்ற கலைகளை ஓலைச்சுவடிகளில் பெரும் கருணையுடன் அருளியுள்ளனர். இந்த ஓலைச்சுவடிகளை டாக்டர் இ. முருகன் அவர்களின் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் பலனாக கிடைத்த பொக்கிஷங்கள் தான் சிறுநீரக கல்லடைப்பு, பித்தப்பை கல்லடைப்பு, கணைய கல்லடைப்பு மேலும் மஞ்சள் காமாலைக்கு ஒரே வேளை மருந்து.

Dr. E. Murugan, MD (S), is renowned for his rapid healing methods, not only in treating stone disease but also other illnesses.